"அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறைபொருளாகும்"

நூல் விவரம்

நூல் பெயர்: அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறைபொருளாகும்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2047ம் ஆண்டு (கி.பி – 2016)
பக்கம்: 192
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி உமரிக்காடு ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 78 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

முகவுரை

வீடுபேற்றினை அடைவிக்கும் மெய்ப்பொருள் நூலைப் படியுங்கள், குற்றமற படியுங்கள் கற்ற மெய்பொருள் நூல் கூறியபடி நிலையாக உறுதியாக இருந்து நடவுங்கள். கல்வி என்ற சொல் அறியாமையைக் கல்லுதல் என்பர். கல்லுதல் என்றால் தோண்டுதல் என்பதாம் அதாவது அறியாமையை அகற்ற அறிவு தானே உதயமாகும். இந்த வார்த்தையே கல்விக்கூடம், கல்லூரி போன்ற இடத்திற்கும் பெயர் ஆயிற்று. அதனாற்றான் வள்ளுவப் பெருந்தகை நம்மை எல்லாம் அறைகூவி அழைப்பது போல் அழைக்கிறார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
மேலும் குறள் ஆசான் இவ்வாறு கூறுவார்.
அறிதோறு அறியாமை கண்டற்றால்
என பிறிதோரிடத்தில். அதாவது நாம் அறிய அறியத்தான் நமது அறியாமை நமக்குப் புலப்படும். வாழ்விற்கு அடித்தளம் அமைக்க கூடிய நூல்களையே படிக்க வேண்டும்.
அதுவும் வீடுபேற்றினை அடைய வைக்கும் நூல்களையே படிக்க வேண்டும்.
காலத்தால் அழியாத நூல்களை மட்டுமே படிக்க வேண்டும். மெய்யை மட்டும் தேர்வு
செய்து படிக்க வேண்டும். அதனால் தான் கசடற கற்க வேண்டும் என்றார். கற்றால்
மட்டும் போதாது. கற்றபடி நடந்திட்டால் அன்றோ படித்ததின் முழுப்பயனை அடைய
முடியும். மேலும் குறளாசான் கூவி அழைப்பதையும் காண்போம். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
அதாவது இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய ஆசான்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.

01
உணவிற்கும், மருந்திற்குமான அளவு குழந்தையினை வளர்க்கும் தாயிற்கே தெரியுமாற் போல், ஆன்ம சக்தி வளர்க்க உன் ஆன்மாவினை பராமரிக்கும் தாயான உன் ஞான குருவை கேட்டு தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் அடிக்கடி பேசப்படக் கூடிய சொல் அகங்காரமாகும். அகங்காரம் என்ற சொல்லில் ‘அகம்’ என்றால் “நான்” என்றும், ‘காரம்’ என்றால் அதற்கு காரணமாக இருப்பது என்றும் பொருள். அதாவது நான் என்பதை அறிவதற்கு காரணமான மனதின் பகுதி அகங்காரம் எனப்படும். ஞானேந்திரியம் ஆகிய கண்ணால் காணப்படும் ரூபத்தையும், காண முடியாத அரூபத்தையும் அறிந்து கொள்ள வைப்பது மனம். மனிதன் சாதாரணமாக அனுபவிக்க கூடியதும் மறைந்து போகக்கூடியதுமான இன்பம் சிற்றின்பம் எனப்படும்.
02
தன்னைக் கொன்று அனுபவிப்பது சிற்றின்பமாகும். ஏனெனில் தன்னில் தானேதான் அனுபவிக்கிறான் சிற்றின்பத்தை, ஏதோ முன்னிலையில் ஒருவரிடம் கிடைப்பதாக அன்றிலிருந்து இன்று வரை நினைத்து ஏமாந்து போகிறான். சற்று நேரம் ஆழ்ந்து சிந்தித்தால் இது புரியாமல் போகாது. மாறக்கூடிய உடல், மனம் ஆகியவற்றால் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் இதில் அடங்கும். அழியாத உணர்வாகிய ஆன்மா, எப்போதும் அனுபவிக்க கூடிய இன்பம் பேரின்பம் எனப்படும் உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே எனலாம். அன்று என்பது சென்ற காலம், இன்று என்பது நிகழ்காலம், என்றும் என்பது வருங்காலம். சென்ற காலம் என்பது நடந்து முடிந்த நிகழ்காலம் ஆகும். அந்த சென்ற காலத்தால்தான் நிகழ்காலம் உருப்பெறுகிறது. நிகழ்காலத்தின் செய்கையின் விளைவுகளே வருங்காலமாகிறது. நிகழ்காலம் என்பது சென்ற காலத்தின் விளைவு. ஆக வருங்காலத்தை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகிவிடுவதில்லை. நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் வருங்காலத்தை தனது இச்சைப்படி மாற்றுகிறான். நிகழ்காலத்தில் விழிப்புடன் இருக்க தெரிந்தவன் வருங்காலத்தை ஆளக்கூடியவன் ஆகிறான்.
03

வருங்காலத்தை ஆளக்கூடியவன் மட்டுமே பேரான்ம பெருஞ்சுகத்தை நல்கிடும் ஞானாசான்மூலம் அகத்தேடலால் அருளானந்த சுகத்தை அகவிழிப்பார்வையால் ஆன்மதரிசனம் பெற முடியும். அறிவின் மூலத்தை உணர்ந்ததால் அறிவின் முடிவையும், முதலையும் உணர்ந்து மகிழமுடியும். ஆனந்தத்தை தேடிய அவர்கள் தாமே ஆனந்த மயமாயினர். இறுதியில் சத்தை அறிந்து சித்தை தெரிந்து ஆனந்தத்தை உணர்ந்து சச்சிதானந்த நிலை அடைந்து முழுமையுற்றார்கள்.அப்படி முழுமையுற்றவர்களின் உள்ளார்ந்த மெய்ப்பொருள்களின் வெளிப்பாடுகள் தான் மறைகள், சூத்திரங்கள், சித்தாந்த வேதாந்த ரகசியங்கள் என துணிந்து கூறலாம். அவையெல்லாம் அனுபவங்களின் தொகுப்பு எனக்கூறலாம். உதாரணத்திற்கு சத்திரிய குல மகரிஷி விஷ்வாமித்திர மாமுனிவர் இறுதியில் அந்த பிரம்மநிலையை அடைவதற்கு தனது காயத்தையே (தேகம்) திரியாக்கி ஞானாக்கினி மூலமாக தன்னை தகித்தபின் அவர் மூலமாக கிடைத்ததுதானே காயத்திரி மந்திரம்.

04

இந்த மந்திரத்தை தான் பிரம்மாவின் முகத்தில் பிறந்தோர் எனக்கூறிக் கொள்ளும் அவர்கள் இன்றும், எல்லா நேரங்களிலும் சப்தத்தோடும் மானசீகமாகவும் கூறி வருவதை யாவரும் கண்டு வருகிறோம். அதனால் தான் அனுபவமே முந்தியது மறைகள் பிந்தியது என்ற பதிலும் வருகிறது. நோற்றலிலே ஆற்றல் நிலைப்பட்டால்தான் இறையருள் கிட்டும் என்பதை வரலாறுகள் நமக்கு பாடமாக உணர்த்துகிறது என்பதற்கு சான்றுகள் பல உள்ளது. இப்பூமி பந்தில் கோடிக்கணக்கான மாந்தர்களின் இதய சிம்மாசனத்தில் உள்ள ஏசுபிரான் அவர்கள் நாற்பது நாள் நோன்பிருந்து (தவக்காலம்) தான் இறையருளை முழுமையாக பெற முடிந்தது. அண்ணல் முகமது நபிகள் நாயகம் அவர்கள் இருபத்தியேழு நாட்கள் அருந்தவம் ஆற்றிய பின்னரே திரு குர் ஆன் வசனங்கள் இறையருளால் அருளப்பட்டது. தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழக மக்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் இறையாற்றலை பெற அவர் பட்ட பாடுகளை அவர் வாயிலாக அறிந்திடுவோம். 

05

பனிரண்டாண்டு தொடங்கியிற்றைப் பகலின்வரையுமே
 
படியிற் பட்ட பாட்டைநினைக்கின்மலையும் கரையுமே 
துனியா தந்தப் பாடு முழுதுஞ்சுகம தாயிற்றேதுரையே
நின்மெய் யருளிங்
கெனக்குச் சொந்த மாயிற்றே.
என மனமுருகப்பாடி மேலும்
ஈராறாண்டு தொடங்கி யிற்றைப்பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கின்இரும்பும் கரையுமே
ஏரா யந்தப் பாடு முழுதுயின்பமாயிற்றேஇறைவா
நின் மெய் யருளிங்
கெனக்குச் சொந்த மாயிற்றே.
இப்படி பேரான்ம தீர்க்கதரிசிகளான ஞானவான்கள் யாவரும் இறையாற்றலை முழுமையாக பெற்றிட அவர்கள் பட்ட பாட்டினை எழுதத்தான் முடியுமோ? மனிதர்களுக்கு பிரமானந்தப் பேற்றையளித்தற்கென்றே இறையருள் முழுமையாகப் பெற்ற பேரான்மஞானிகள் மறைகளை யருளியிருக்கிறார்கள். யார் மோட்சம் அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு முயன்று மேற்கண்ட மறைகளில் கூறப்பட்ட வழியில் நடத்து பிரம்மநிஷ்டர்களாகிய பெரியோர்களின் சகவாசத்தில் இருந்து காமகுரோதாதி வாசனைகளை ஒழித்து, சாதனைகளை அடைத்து நித்தியம் எது, அநித்தியம் எது என்று பிரித்தரியும் விவேகம் 

06

உடையவர்களாய், விவேகம் அற்ற தன்மையான மாயையாகிய பேத புத்தியை ஒழித்து, ஓர் நிலையில் நின்று பிறப்பறுக்கும் ஞானகுருவான காரணகுருவை அடைகிறார்களோ, அவர்கள் பிறபிறப்பாகிய பவசாகரத்தை கடந்து முத்தியடைந்து கரை சேர்வார்கள் இது சர்வ நிச்சயம். இந்த நூல் யாருக்கு சொந்தம் என்ற எண்ணம் எழாமல் போகாது. ஆரம்ப சாதகர்களுக்கும் அப்பியாசிகளுக்கும் ஆர்வம் இருப்பினும், அவர்கட்கு புரிவதும் உணர்வதும் சற்று கடினமாகத்தான் இருக்கும். சதா நிஷ்டர்கள் சகச நிஷ்டர்களான சதானந்தத்தை அனுபவிப்போருக்கே தெளிவாக விளங்கும்
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்தநிலைதானே
நிருவிகற்ப நிலையுமாகி
என்றும் அழியாத
இன்ப வெள்ளம் தேக்கி இருக்க எனைத்
தொடர்ந்து
தொடர்ந்து இழுக்கும் அந்தோ.
ஆம் தாயுமான சுவாமிகள் கூறியபடி நின்ற நிலையை நிலையாக பெற்றவனே இந்த நூலுக்கு அதிபதி என்று கூறலாம். அவன் தானே நிருவிகற்ப சமாதிக்கு ஏகிச்செல்லும் பெருஞ்சுகம் பெற்றவன். அவன் தானே ஜீவன் முத்தன் என்ற சொல்லுக்கு தகுதியானவன் ஆகிறான்.அறவழிச் செல்லும் தவ ஆற்றல் மிக்கோர் எல்லா நேரத்திலும் அகவிழிப் பார்வையால் இருப்பதால் அவர்கள் எந்த நேரமும் எந்த சூழ்நிலையிலும் மோனநிலையில் இருந்திடுவர். ஞானானந்த சுகத்தில் இருந்திடுவர்.

07
ஒன்றை நோக்க மற்றொன்றின் மேல் அதிக பிரியமாயினும் முடிவில் ஆன்மாவிடமே மிக்க பிரியமாய் இருந்திடுவர். அதனினும் பிரியமானது வேறொன்றுமில்லை. ஏனெனில் ஆன்மாவே ஆனந்த சொரூபம். விஷய சுகங்களில் உள்ள விருப்பு வெறுப்பு உதாசீனம் முதலியவை மாறி மாறி வருவது போல், ஆன்மாவின் கண்ணுள்ள விருப்பு மாறாததால் ஆன்மாவே ஆனந்தரூபம் என்பதாம். விடய சுகத்தை விடயானந்தம் என்றும், பிரம்ம சுகத்தை பிரம்மானந்தம் என்றும், வாசனை சுகத்தை வாசனானந்தம் என்றும், ஆன்ம சுகத்தை ஆத்மானந்தம் என்றும், முக்கிய சுகத்தை முக்கியானந்தம் என்றும், நிச சுகத்தை நிசானந்தம் என்றும், அத்துவித சுகத்தை அத்துவைதானந்தம் என்றும், ஞான சுகத்தை ஞானானந்தம் என்றும்பேசப்படுகின்ற ஆன்மீக சுகங்களை ஓரளவு தெளிவுசெய்துள்ளோம்.  மேலும் முக்கியமாக முறைகளில் கூறியுள்ள மக வாக்கியங்களில் நான்கு மகா வாக்கியமும் என்ன என்ன கூறுகிறது என்பது பற்றியும் கைவல்லிய நவநீதம் என்ற வேதாந்த ஞான நூலில் இருந்தும் தெளிவு செய்துள்ளோம். எல்லா ஞானப் பயிற்சிகளும் இந்த தேகத்திற்கு உள்ளிருக்கும் தேகியான ஆன்மாவைப் பற்றியே எழுதப்பட்டுள்ளன. சைவ சித்தாந்த ஆகமங்கள் வேதாந்த சாத்திரங்கள் நான்மறைகளின் மொத்த சாராம்சங்களான மகா வாக்கியங்கள் நான்கும் இப்படி எல்லா சமயங்களும்
08
புறத்தே தேடினால் புலப்படான்,அகத்தே தேடினால் அகப்படுவான்என்பதையே வலியுறுத்தி கூறிவருகின்றன. அதையே யாமும் அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறைப்பொருளாகும் என்ற இந்நூலில் உறுதியாக குறிப்பிட்டுள்ளோம்.ஒருவர் பேரான்ம பெருஞ்சுகத்தினை நல்கிடும் காரணக் குருவான ஞானாசானை அடைந்து சற்சங்கத்தோடு கூடி விவேகம் உதித்து துற்சங்கத்தை விட்டு நீங்கி காமிய கருமத்தில் இருந்து விடுதலைப் பெற்று, நிஷ்காமிய கர்மம் செய்து அதனால் இந்த உடம்பில் சித்து எது? சடம் எது? மெய்பொருள் எது? என்று அறிகிற ஞானபூமிகள் ஏழினையும் வரிசையாகசுபேட்சை யின் விளக்கத்தையும்விசாரணை யின் விளக்கத்தையும்தநுமாநசி யின் விளக்கத்தையும்சத்துவாபத்தி யின் விளக்கத்தையும்அசம் சத்தி யின் விளக்கத்தையும்பதார்த்தபாவனை யின் விளக்கத்தையும்துரியம் என்பதின் விளக்கத்தையும் தெளிவு செய்துள்ளோம்.நான்காவது ஞானபூமியான சத்துவா பத்தியை அப்பியாசம் இன்றியே இருந்து மரணமடைந்தோர் மேலான பதவிகளை அடைந்து பிறகு நல்ல வம்சத்தில் பூமியிற் பிறந்து கிரமமாக நான்காம் பூமியான சத்துவா பத்தியையும் அடைந்து முக்தி பெறுவார்கள். அவர்கள் மயக்கத்திற்கு காரணமான பிறவியை அடையார்கள் என்பதையும் தெளிவு செய்துள்ளோம்.இதோ இங்கே என்றும் அதோ அங்கே என்றும் சொல்லப்பட்டாலும் அங்கே ஒன்றும் இராது.
09

 இதோ தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறதேஎன்றும் கிறிஸ்தவ வேதாகமமான விவிலியம் உண்மைகளை மறைக்காமல் கூறிய கருத்தையும் பதிவு செய்துள்னோம்.ஞானாக்கினியால் தன்னை தகித்துக் கொண்டவர்களை இறுதி நாளில் அவர்கள் தேகத்தை நெருப்பில் இட்டு அழிக்க வேண்டுமோ? வேண்டவே வேண்டாம். அவர்கள் உடம்பு முன்னமே ஞானக்கினியால் வறுக்கப்பட்டதால் பேசாமல் அவர்களை “குகை” செய்து அவர்களை புதைத்து வழிபடுங்கள் என்று பெருந்திரட்டு என்ற ஞான நூல்கூறியதையும் குறித்துள்ளோம்.ஞானத்தை அருட்கொடையாக அருளும் ஞானாசானின் அமைப்பு சத்சங்கமாக தூய்மையான தொண்டர்களை கொண்ட திருக்கூட்டமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்னோம். வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தை அருளும், பொருளும் நிறைவெய்து, வளமோடு நலமாக வாழ என்றும் வாழ்த்தி யனுப்புவதை தொடர்ந்து செய்து வருகிறது உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை.“தேகம் யாதேனும் சித்தி பெறச் சீவன் முத்திஆகும்  நெறி நல்ல நெறி ஐயா பராபரமே”என்று தாயுமான சுவாமிகள் கூறிய நல்ல நெறி பாரெங்கும் பரவட்டும் என்று வேண்டிக்கொள்வோம். இந்த நூல் வெளிவரக் காரணமான எமது ஊனோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்த அருட் செல்வங்களான எமது அன்பு மாணவச்செல்வங்கட்கு சொல் மாலை தொடுத்து அழகு பார்க்கின்றோம்.

10