"உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே"

நூல் விவரம்

நூல் பெயர்: உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் ஆண்டு 2031, (கி.பி – 2000)
இரண்டாம் பதிப்பு திருவள்ளுவர் ஆண்டு 2045, (கி.பி – 2014)
பக்கம்: 240
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி – சிவத்தையாபுரம் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 62 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

“உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே” இந்நூல் குருநாதரால் இயற்றப்பட்ட முதல் நூலாகும். உலக உயிர்கள் அனைத்தும் உய்வடைய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இந்நூலில் மொத்த ஆன்மீக கருத்துகளும் புதைந்து கிடக்கின்றன. அத்வைதம், வினைகள், அத்வைதானந்தம் மற்றும் ஞானியின் குணம் குறித்தும் முதல் பாகத்தில் விரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் உடல் தத்துவம், ஞானசாதனங்கள், ஞானபூமிகள், அஞ்ஞான பூமிகள் மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூல் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 2000. இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 2014.