"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

Dr. செந்தில் அரசு MBBS, MD
நெல்லை

ஞானக்கல்வியை குறித்து அறியாத நிலையிலும் பூர்வ ஜென்ம பலனாய் நம் குருவின் திருவருளால் தீட்சை கிடைக்கப்பெற்றேன். என் குருநாதர் எனக்கு இறைவனாக, தகப்பனாக, தாயாக பல நேரங்களில் எனை காப்பாற்றி நேர்படுத்தி இருக்கிறார். குருநாதரின் அன்பும், அக்கறையும் அளப்பரியது ஒரு சமயம் பல காரணங்களால் சத்சங்ககளில் கலந்து கொள்ளாத நாட்களில் பரமேட்டி குருவின் உருவில் வந்து உணர்த்தி உன்னத வழியை நினைவூட்டியிருக்கிறார்கள்.

குருநாதரின் அன்பு வெளிப்பட்டிருந்தது. என் சகோதரி குடும்ப உறுப்பினர்கள் சுலபமாக சுகமடைந்த போது சகோதரியின் நிலைமை மட்டும் சரிவரவில்லை. அனைத்து மருந்துகளும் செலுத்தப்பட்ட பின்னும் மூச்சு திணறல் கூடிக் கொண்டே போனது. இதற்கிடையில் நான் சிவத்தையாபுரம் சென்று அய்யாவை சந்தித்து முறையாக ஆசீர்வாதமும், அருட்பிரசாதமும் பெற்றுக் கொண்டேன். அருட்பிரசாதத்தை அவளிடம் கொடுத்து பூசி வரச்சொன்னேன். மறுநாள் எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொலைபேசி வந்தது. சகோதரிக்கு மூச்சு திணறல் அதிகமாக உள்ளது படுக்க கூட முடியவில்லை என்று அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குருநாதர் மட்டுமே மாற்ற முடியும் என்று உணர்ந்தேன். குருநாதருக்கு தொலைபேசி செய்வதற்காக காலை 6 மணி வரை காத்துக் கொண்டிருந்தேன்.

01
சரியாக 6 மணிக்கு நான் வழக்கமாக அய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை. ஆனால் நான் போனில் ஹலோ என்று சொன்னவுடன் யாரு … செந்தில் அரசுவா என்று சொன்னதை கேட்டு அதிர்ந்து போனேன். விஷயத்தை அய்யாவிடம் கூறினேன். அய்யா தியானத்தில் நினைத்து கொள்கிறேன் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் மிக அரிதாக கிடைக்கும் மருந்து அப்போது திருநெல்வேலியில் இந்த மருந்து எங்குமே இல்லை. அப்போது அதிகமாக என்னுடைய நட்பில் இல்லாத மருந்து விற்பனையாளர் என்னைத் தொடர்பு கொண்டு சார் மருந்து என்னிடம் உள்ளது. மேலும் அவர் கேட்ட பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார். பணம் கொடுத்தாலும் மருந்து கிடைக்காத காலகட்டம் அது. இந்த மருந்து செலுத்திய 6மணி நேரத்தில் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகவும் நார்மலாகி விட்டாள். அவளின் இந்த பூமியின் இருப்பு என்று இறைவனின் அருட்கொடை.
02

பின்னாளில் Dr.பொன்ராஜ் அவர்கள் செந்தில் கடைசி நேரத்தில் உங்கள் சகோதரிக்கு எந்த மாதிரி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள் என்று கேட்டார். அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். குருநாதரின் எளிமையும், பொறுமையும் அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மையும் மனதில் நீங்காத ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எமது குருநாதரின் சீடனாக இருப்பது எனக்கு கிடைத்த பெறும் பாக்கியம் என்றும் அவர் பொற்பாதங்களில் சரணாகதி அடைய வேண்டும்.

03
நன்றி!