"உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு"


நூல் விவரம்
நூல் பெயர்: உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2041ம் ஆண்டு (கி.பி – 2014)
பக்கம்: 288
வெளியிடப்பட்ட இடம்: சென்னை – மாதானங்குப்பம் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 72 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
முகவுரை
ஓரறிவுடைய புல் பூண்டு முதல் ஆறறிவுடைய மக்கட்கெல்லாம் உயிர்
உண்டு என்பது சராசரி மக்கள் முதல் அறிவார்ந்த அறிஞர் வரை யாவர்க்கும்
தெரியும்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
– தொல்காப்பியம் 1526
புல்லும் மரனும் ஓர் அறிவினவே – – தொல்காப்பியம் 1527
நந்தும் முரளும் ஈர் அறிவினவே – தொல்காப்பியம் 1528
சிதலும் எறும்பும் மூவரினவே – – தொல்காப்பியம் 1529
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே – தொல்காப்பியம் 1530
மாவும் மாக்களும் ஐ அறிவினவே – தொல்காப்பியம் 1531
மக்கள் தாமே ஆறு அறிவுயிரே – தொல்காப்பியம் 1532
என தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தெளிவாய்க்
கூறியுள்ளது. உயிருக்கு உருவம் கிடையாது என்பதும், அந்த உயிரின்றி
எதுவும் நடவாது என்பதும் யாவரும் உணர்ந்ததே ஆனால் இந்த உயிர் எங்கே இருக்கிறது. எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விஞ்ஞானிகளோ. மருத்துவ விற்பன்னர்கள் கூட இதுவரை ஆய்வு செய்தும் காணமுடியவில்லை.